அவசியம் படிக்க வேண்டிய பதிவுகள்

 ப்ளாக்கர் அல்லாத பிற தொழில்நுட்பப் பதிவுகளையும்  எழுதலாம் என முடிவெடுத்தப் பின், சில அடிப்படை விசயங்களை எழுதலாம் என எண்ணினேன். ஆனால் அவற்றை பல பதிவர்கள் ஏற்கனவே எழுதிஇருக்கிறார்கள்.  மீண்டும் அதை எழுத மனம் இல்லாததால் அந்த பதிவுகளை இங்கு பகிர்கிறேன்.


1. தமிழில் டைப் செய்ய கூகிள் சாஃப்ட்வேர் 
 இதை பற்றிய பதிவு எழுதலாம் என நேற்று Screenshots எல்லாம் எடுத்துவிட்டு, பிறகு “கூகிள்” என்று எழுதலாமா? இல்லை “கூகுள்” என்று எழுதலாமா? என்று பார்ப்பதற்காக கூகிளில் தேடினால், முதல் பக்கத்தில் இன்ட்லியில் நண்பர் கூடல் பாலா அவர்களின் இந்த பதிவு. விளக்கமாக படங்களுடன் கூறியுள்ளார்.

தமிழில் தட்டச்சு செய்ய கூகுள் தரும் மென்பொருள் !

2.  பதிவர்களுக்காக சில HTML CODES
ஒரு வாரத்திற்கு முன் சில அடிப்படை HTML Codes பற்றி  பதிவிடலாம் என நினைத்தால் அதை பற்றியும் நண்பர் கான் அவர்கள் ஏற்கனவே எழுதியுருக்கிறார்.

உங்கள் பிளாக்கருக்கு தேவையான html கோடிங்….

3. கூகிளின் +1 பட்டன்
 கூகிள் சமீபத்தில் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்று பதிவுகளை வாசகர்கள் பகிர்வதற்காக “+1 பட்டனை” அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுவாக ப்ளாக்கர் தொடர்பானவற்றை முதலில் நான் செய்து பார்த்து பிறகு தான் அதைப் பற்றி பதிவெழுதுவேன். இதனை செய்முறை படுத்துவதில் எனக்கு ஒரு  சிக்கல் ஏற்பட்டதால் அதைப் பற்றி பதிவிட முடியவில்லை. நீங்கள் இது பற்றி தெரிந்துக் கொள்ள சகோதரி பொன்மலர் எழுதிய இந்த பதிவை படிக்கவும்.

கூகிளின் +1 பட்டன் அறிமுகமானது; வலைப்பூவில் சேர்ப்பது எப்படி?

4.  நிறங்களுக்கான HexaDecimal Code:

நமது ப்ளாக்கில் நிறங்களை மாற்றும் போது அதற்கான Code-ஐ கொடுக்க நேரிடும். எந்த கலருக்கு எந்த Code என்பதை நண்பர் இரா.குமரேசன் அவர்கள் பதிவிட்டுள்ளார்கள். அதனையும் பார்க்கவும்.

HTML-லுக்கான கலர் Codes

5.  அவிரா ஆன்டி-வைரஸ்
ஒவ்வொரு கணினியிலும் அவசியம் இருக்க வேண்டியது ஆன்டி-வைரஸ் சாப்ட்வேர். அவைகள் இலவசமாகவும் கிடைக்கின்றன, கட்டணங்களுடனும் கிடைக்கின்றன. அதில் இலவசமான சாஃப்ட்வேரில் என்னை அதிகம் கவர்ந்தது, நான் உபயோகப்படுத்துவது அவிரா ஆன்டி-வைரஸ். இதைப்பற்றி நண்பர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.

அவிரா இலவச ஆண்டி வைரஸ்

இன்று  இது போதும் என நினைக்கிறேன். நிச்சயம் இந்த பதிவுகள் உங்களுக்கு பயனளிக்கும் என நம்புகிறேன்.

இதையும் படிங்க:  நமது ப்ளாக்கை பிரபலமாக்குவது எப்படி? (இறுதி பகுதி)

24 thoughts on “அவசியம் படிக்க வேண்டிய பதிவுகள்”

  1. நன்றி நண்பரே. எனக்கு ஒரு உதவி. தேடுவதற்கு முயற்சிக்காமல் இருக்கிறேன். ஃபேஸ்புக் பக்கத்தில் தானாகவே நமது பதிவுகள் சேர்வது எப்படி? என்று சொல்ல முடியுமா?

    எனது ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்க்கவும்.
    பொன்மலர் பக்கம்

    Reply
  2. //பொன்மலர் said… 2

    நன்றி நண்பரே. எனக்கு ஒரு உதவி. தேடுவதற்கு முயற்சிக்காமல் இருக்கிறேன். ஃபேஸ்புக் பக்கத்தில் தானாகவே நமது பதிவுகள் சேர்வது எப்படி? என்று சொல்ல முடியுமா?

    எனது ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்க்கவும்.
    பொன்மலர் பக்கம்

    //

    இந்த பதிவை படிக்கவும்.

    http://bloggernanban.blogspot.com/2011/05/blog-post_374.html

    தற்போது அதில் ஏதோ தவறு இருப்பதால் தானாக அப்டேட் ஆவதில் சிக்கல் உள்ளது. சரி செய்ய முயற்சிக்கிறேன். தங்கள் வருகைக்கு நன்றி சகோதரி!

    Reply
  3. //..மீண்டும் அதை எழுத மனம் இல்லாததால்
    ஒரே விடயத்தை உங்கள் பாணியிலும் எழுதலாமே!

    Reply
  4. புதிதாய் வலைப்பூ ஆரம்பித்திருக்கும் உங்கள் நண்பரை கைபிடித்து அழைத்து வழி நடத்துங்கள். காத்திருக்கிறேன் நடந்து வர.
    http://saathuryankavithaigal.blogspot.com/

    Reply
  5. //# கவிதை வீதி # சௌந்தர் said…

    கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியதுதான் ..
    மீண்டும் ஒரு முறை படிக்கிறேன்..
    நன்றி
    //

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பா!

    Reply
  6. //VANJOOR said…

    THE FOLLOWING MAY BE USEFUL.

    I HAVE NOT TRIED IT.

    ——————————-

    பதிவிட்ட உடனேயே FaceBook twitter இரண்டிலும் தானாகவே இடுகைகள் சென்றடைய

    http://itulaku.blogspot.com/2011/02/facebook-twitter.html

    ————————
    வாஞ்ஜுர்***
    //

    தங்கள் தகவலுக்கு நன்றி. ஆனால் இது போன்ற third-party applications நமது ட்விட்டர், ஃபேஸ்புக் ஆகியவற்றின் தகவலை நமக்கு தெரியாமலே எடுக்க வாய்ப்புள்ளதால் பாதுகாப்பு கருதி இவைகளை நான் பயன்படுத்துவதில்லை.

    Reply
  7. //Lakshmi said…

    உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கேன். நேரம் கிடைக்கும்
    போது பார்க்கவும்.

    http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_8884.html
    //

    வலைச்சரத்தில் என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!

    Reply
  8. //சமுத்ரா said…

    Thank you
    //

    தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி நண்பா!

    Reply
  9. //koodal bala said…

    நம்மள பத்தி எடுத்து சொன்னதுக்கு நன்றிண்ணே ….
    //

    தங்கள் வருகைக்கு நன்றி சகோ.!

    Reply
  10. //ந.ர.செ. ராஜ்குமார் said…

    //..மீண்டும் அதை எழுத மனம் இல்லாததால்
    ஒரே விடயத்தை உங்கள் பாணியிலும் எழுதலாமே!
    //

    நன்றி நண்பா! இனி எழுதுகிறேன்.

    Reply
  11. //vijay said…

    புதிதாய் வலைப்பூ ஆரம்பித்திருக்கும் உங்கள் நண்பரை கைபிடித்து அழைத்து வழி நடத்துங்கள். காத்திருக்கிறேன் நடந்து வர.
    http://saathuryankavithaigal.blogspot.com/
    //

    வாழத்துக்கள் நண்பா! வலைப்பூ தொடர்பாக எதுவாயினும் கேட்கலாம். உதவ காத்திருக்கிறேன்.

    Reply
  12. நல்ல பயனுள்ள த்கவல்கள். உங்கள் பதிவைப் பார்ர்த்த பின் என்பதிவை இண்ட்லியில் இணைத்துள்ளேன். மிக்க நன்றி

    Reply
  13. //anbu said… 20

    நல்ல பயனுள்ள த்கவல்கள். உங்கள் பதிவைப் பார்ர்த்த பின் என்பதிவை இண்ட்லியில் இணைத்துள்ளேன். மிக்க நன்றி//

    மிக்க மகிழ்ச்சி நண்பா!

    Reply
  14. எனது வலைப்பூவில் நான் எழுதும் என் பகிர்வுகளுக்கு தோதாக புகைப்படம் பதிவிறக்கம் செய்து அருகில் போட்டால் மிக நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். அதை எப்படி செய்வது?

    Reply
  15. //vijay said… 22

    எனது வலைப்பூவில் நான் எழுதும் என் பகிர்வுகளுக்கு தோதாக புகைப்படம் பதிவிறக்கம் செய்து அருகில் போட்டால் மிக நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். அதை எப்படி செய்வது?
    //

    கூகிளில் தேடி பாருங்கள் நண்பா! நான் அப்படி தான் செய்கிறேன்.

    Reply
  16. abdul basith ungalai yeppadi santhippathu pls cantace namber tharuveergala blog cretter address mugavari vendum tamill bloge ungalin vazhi nantraga ullathu…

    Reply

Leave a Reply