Google Bar-ஐ 3 உலவிகளில் மிக எளிதாக பெற

சமீபத்தில் கூகிள் அறிமுகப்படுத்தியுள்ள Google bar பற்றியும், அதனை க்ரோம் உலவியில் உடனடியாக பெற்றுக்கொள்வது பற்றியும் பார்த்தோம். (என்னையும் சேர்த்து) இன்னும் பலருக்கு அந்த வசதி வரவில்லை. தற்போது அவ்வசதியை ஃபயர்பாக்ஸ் (Firefox), க்ரோம் (Chrome) , இன்டர்நெட் எக்ஸ்ப்லோரர் (Internet Explorer) உலவிகளில் மிக எளிதாக எப்படி பெறுவது? என்று பார்ப்போம்.

ஃபயர்பாக்ஸ் உலவியில் பெற:

1. ஃபயர்பாக்ஸ் உலவியை திறந்து Cntrl+Shift+K என்ற பட்டன்களை ஒரே நேரத்தில் அழுத்தவும். பிறகு பின்வரும் விண்டோ திறக்கும்.

அந்த விண்டோவின் கீழே பின்வரும் நிரலியை இட்டு Enter பட்டனை அழுத்தவும்.

2. பிறகு அந்த விண்டோவை மூடிவிட்டு கூகிள் தளத்தை மறுபடி திறந்தால் புதிய கூகிள் பார் வந்துவிடும்.

க்ரோம் உலவியில் பெற:

1. க்ரோம் உலவியை திறந்து Ctrl+Shift+J என்ற பட்டன்களை ஒரே நேரத்தில் அழுத்தவும். பிறகு பின்வரும் விண்டோ திறக்கும்.

அந்த விண்டோவில் Console என்பதை தேர்வு செய்து, அங்கு பின்வரும் நிரலியை இட்டு Enter பட்டனை அழுத்தவும்.

2. பிறகு அந்த விண்டோவை மூடிவிட்டு கூகிள் தளத்தை மறுபடி திறந்தால் புதிய கூகிள் பார் வந்துவிடும்.

 இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் பெற:

1. இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் உலவியை திறந்து, கூகிள் தளத்திற்கு சென்று F12 பட்டனை அழுத்தினால் பிறகு பின்வரும் விண்டோ திறக்கும்.

அதில்  Script என்பதை தேர்வு செய்து, Console என்பதை தேர்வு செய்து, அதன் கீழே பின்வரும் நிரலியை இடவும்.

பிறகு அதற்கு கீழே உள்ள Run Script என்ற பட்டனை அழுத்தவும்.

பிறகு அந்த விண்டோவை மூடிவிட்டு கூகிள் தளத்தை மறுபடி திறந்தால் புதிய கூகிள் பார் வந்துவிடும்.

கவனிக்க:  இந்த வசதியை பெற Google.com என்ற முகவரியை பயன்படுத்த வேண்டும். Google.co.in என்றோ அல்லது வேறு முகவரியோ இருந்தால் இதனை பெற முடியாது. வேறு முகவரி இருந்தால் அதன் கீழே Goto Google.com என்று இருக்கும். அதனை க்ளிக் செய்து முயற்சிக்கவும்.

நன்றி: http://techinnews.in/

இதையும் படிங்க:  ஹேக் செய்யப்பட்ட ஜிமெயில்/கூகுள்

6 thoughts on “Google Bar-ஐ 3 உலவிகளில் மிக எளிதாக பெற”

  1. ப்ளாக்கர் நண்பன்… என் தளத்தில் நான் போடும் கமெண்டடுகளை மட்டும் தனித்துக் காட்ட எதுவும் வழி உண்டா என நெடுநாளாய் தேடிக் கொண்டிருந்தேன். உங்கள் தளத்தில் அதற்கான பதிவைக் கண்டு செயல்படுத்தினேன். வெற்றி. மிகமிகமிகமிக நன்றி ஐயா…