ஐம்பது மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் தகவல் திருடப்பட்டுள்ளது என்றால் யாரோ சிலர் பேஸ்புக் கணக்கை உங்களுக்கு தெரியாமல் ஹேக் செய்து திருடவில்லை. "எனக்கு எப்ப கல்யாணம் நடக்கும்", "நான் எப்படி சாவேன்", "என்ன பத்தி மக்கள் என்ன சொல்றாங்க" அப்படின்னு சில பேஸ்புக் Apps இருக்கும் அல்லவா? அவைகளை நீங்க பயன்படுத்தும்போது "உங்கள் தகவல்களை அந்த ஆப்ஸ் டெவலப்பர்கள் தெரிந்துக்கொள்ள நீங்களே அவர்களுக்கு அனுமதி கொடுக்கிறீர்கள்."
பொதுவாக பேஸ்புக் விதிப்படி, பயனாளர்கள் கொடுக்கும் தகவல்களை ஆப் டெவலப்பர்கள் மற்றவர்களிடம் சேர் செய்ய கூடாது. ஆனால் Cambridge Analytica நிறுவனம் இப்படி பெறப்பட்ட பயனாளர்களின் தகவல்களை தேர்தல் பயன்பாட்டிற்காக ட்ரம்ப் குழுவினருடன் பகிர்ந்துக் கொண்டதால் இது திருட்டு ஆகிறது.
Cambridge Analytica திருட்டு பத்திரிக்கைகளால் வெளிக்கொணரப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் பயன்படுத்தும் ஆப் யாரால் உருவாக்கப்பட்டுள்ளது, எதற்காக உருவாக்கப்பட்டுள்ளது என்று உங்களுக்கு தெரியுமா? திருடன் கையில் சாவியைக் கொடுத்துவிட்டு, அவன் திருடிவிட்டு சென்றப்பின் புலம்புவதால் எந்தவொரு பயனும் இல்லை.
இனிமேலாவது விளையாட்டு என்ற பெயரில் இது போன்ற ஆப்களை பயன்படுத்துவதை தவிருங்கள்.
ஏற்கனவே இது போன்ற ஆப்களுக்கு நீங்கள் அனுமதி கொடுத்திருந்தால் https://goo.gl/qDwnng என்ற முகவரிக்கு சென்று Remove செய்திடுங்கள்.
எல்லா ஆப்களும் தகவல் திருட்டுக்காக உருவாக்கப்படுவதில்லை. சிலர் விளம்பரம் மூலம் வருமானம் ஈட்டுவதற்காக ஆப்களை உருவாக்குகின்றனர்.
குறிப்பு: தற்போது நீங்கள் பயன்படுத்திய ஆப்களை மூன்று மாதத்திற்கு மேல் பயன்படுத்தாமல் இருந்தால் உங்கள் தகவல்களை டெவலபர்கள் அணுக முடியாது என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
3 Comments
பயனுள்ள தகவல். நன்றி.
ReplyDeleteபயனுள்ள பகிர்வு! நன்றி!
ReplyDeleteபேஸ்புக் தகவல் திருட்டு தொடர்பில் என்ன நடந்தது என்று அறிய ஆவலாக இருந்தேன். சிறப்பாகவும் சுருக்கமாகவும் தந்தமைக்கு நன்றி.
ReplyDelete#082/2018/SigarambharathiLK
2018/03/25
காலங்கள் யாருக்காகவும் காத்திருப்பதில்லை...
https://newsigaram.blogspot.com/2018/03/KAALANGAL-YAARUKKAAGAVUM-KAATHTHIRUPPATHILLAI.html
பதிவர் : கவின்மொழிவர்மன்
#சிகரம் #தமிழ் #கவிதை #SIGARAM #SIGARAMCO #TAMIL #POEM
#சிகரம்