சைபர் க்ரைம் - ஒரு பார்வை

இணையம் ஒரு விசித்திரம். ஒரு பக்கம் எண்ணற்ற வசதிகள் மூலம் இனிய முகங்களை காட்டி நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன. இன்னொரு பக்கம் ஹேக்கிங், ஸ்பாம், ஆபாசம் போன்ற வக்கிர முகங்களை காட்டி நம்மை துன்பத்தில் ஆழ்த்துகின்றன. சைபர் க்ரைம் எனப்படும் இணைய குற்றங்களை பற்றியும், பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும் சிறிதளவு இங்கு பார்ப்போம்.

இணைய குற்றங்கள் (Cyber Crimes):


1. ஸ்பாம்(Spam) எனப்படும் தேவையில்லாத  மெயில்கள். இவற்றை பற்றி ஈமெயில் ஐடியை பாதுகாக்க சில வழிகள் என்ற பதிவில் பார்த்தோம்.

2. கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் மூலம் இணையத்தில் பணபரிமாற்றங்கள் நடக்கும்பொழுது, கடவுச்சொல் உள்பட கணக்கு விவரங்களை திருடுவது.

3. பாலியல் ரீதியான தொல்லைகள் . சாட்டிங்கில் ஆரம்பித்து டேட்டிங்கில் முடிகிறது இன்றைக்கு சில இணைய நட்புகள். அதுமட்டுமின்றி காதலன் என்ற பெயரில் வக்கிர வெறிபிடித்த கயவர்கள் பெண்களை ஆபாசமாக படம்பிடித்து அதனை இணையத்தில் வெளியிடுகிறார்கள். மேலும் அதனைக் கொண்டே பெண்களை மிரட்டி வருகிறார்கள்.

4. போதை பொருள் விற்பனை. தடைசெய்யப்பட்ட போதை பொருள்களை விற்பனை செய்வதற்கும் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

5. இணையதளங்களை ஹேக் செய்வது. ஹேக்கர்களிடமிருந்து அமெரிக்காவின் சி.ஐ.ஏ-வும் தப்பவில்லை, மின்னணு சாதனங்களில் ஜாம்பவனாக திகழும் சோனி(Sony)யும் தப்பவில்லை. சமீப காலமாக பல தளங்கள் ஹேக் செய்யப்படுகின்றது.

6. இருபது வயதுக்குட்பட்டவர்களுக்கு அல்லது இருபது வயதுக்குட்பட்டவர்களின் ஆபாச புகைப்படங்கள், படங்கள் இன்னும் சிலவற்றை இணையத்தில் பதிவது.  [ஒன்றுமட்டும் புரியவில்லை. அது போன்ற ஆபாச தளங்களுக்கு சென்றால் கேள்வி கேட்கும். நீங்கள் இருபது  வயதுக்குட்பட்டவரா? இல்லையா? என்று. சிறுவர்களும் "ஆம்" என்பதை க்ளிக் செய்தால் எளிதாக அந்த தளங்களை பார்க்கலாம். இது எப்படி இருக்கிறது என்றால், சிகரெட் பாக்கெட்டில் மண்டை ஓடு படத்தை போடுவது போல தான். ஆபாச தளங்களை முழுமையாக தடை செய்வதே இதற்கு சரியான தீர்வாகும்.]

7. இவற்றைவிட கொடியது, குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்கள். மனித உருவில் பல மிருகங்களும் நம்முடன் வாழத்தான் செய்கின்றன. இவர்கள் சிறுவர், சிறுமிகள் உரையாடும் அரட்டை அறைகளுக்கு(Chatting) சென்று தங்களை குழந்தைகளாகவே அறிமுகம் செய்கின்றனர். பிறகு அவர்களின் புகைப்படங்கள், வீட்டு முகவரி, பள்ளி முகவரி என தகவல்களை பகிர்கின்றனர். இது போன்ற கேடு கெட்டவர்கள் ஒரு அமைப்பாகவே செயல்படுகின்றனர். தங்களுக்குள் குழந்தைகளின் ஆபாச புகைப்படங்களையும், தகவல்களையும் பகிர்ந்துக் கொள்கின்றனர்.

பாதுகாப்பு வழிகள்:

1. எந்த நிலையிலும் முகம் தெரியாத நபர்களிடம் உங்கள் தொலைபேசி எண், வீட்டு முகவரி, பள்ளி முகவரி  போன்றவற்றை பகிர வேண்டாம்.

2. ஃபேஸ்புக் போன்ற சமூக தளங்களில் அறிமுகம் அல்லாதவர்களை நண்பர்களாக சேர்க்க வேண்டாம்.

3. குழந்தைகள் தனி அறையில் இணையத்தில் உலவுவதை அனுமதிக்காதீர்கள். குழந்தைகள் பயன்படுத்தும் கணினிகளை பொதுவான இடத்தில் வைப்பது நலம்.

4. இணையம் பற்றியும் பாதுகாப்பு வழிகள் பற்றியும் உங்கள் குழந்தைகளிடம் மனம் விட்டு பேசுங்கள். கணினி பற்றி அவர்களுக்கு என்ன தெரியும்? என்பதை கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள். அவர்களுடன் இணையத்தில் சிறிது நேரம் செலவிடுங்கள். அதிகமான குழந்தைகள் வழிமாறி செல்வதற்கு சரியான அரவணைப்பு இல்லாதே காரணம் என நான் கருதுகிறேன்.

5. உங்கள் குழந்தைகள் பார்வையிடும் வலைத்தளங்களை கண்காணியுங்கள். நீங்கள் செல்லும் போது குழந்தைகள்அவர்கள் பார்த்துக் கொண்டிருந்த வலைத்தளத்தை மூடினால், உடனே கவனிக்கவும்.

6. அறிமுகம் இல்லாத நபர்கள் உங்களை நேரில் சந்திக்க அழைத்தால் மறுத்துவிடுங்கள்.

7. நீங்கள் மற்றவர்களுடன் அரட்டை அடிப்பதை அவர்கள் பதிவு செய்யக் கூடும் என்பதை மறவாதீர்கள்.

8. அறிமுகம் இல்லாதவர்களுடன் முகம் பார்த்து அரட்டை அடிக்கும் வீடியோ சாட்டிங்கை தவிர்த்துக் கொள்ளுங்கள். அதுவும் பதிவு செய்யப்பட்டு, உங்களுக்கு தெரியாமலே இணையத்தில் பரப்பப்படலாம்.

9. இணையத்தில் உங்களை பற்றிய முழு விவரங்களையும் பகிர வேண்டாம். முக்கியமாக ஃபேஸ்புக்கில்.

10. குழந்தைகள், பெண்கள்  புகைப்படங்களை இணையத்தில் பகிர்வதை தவிர்க்கவும். தற்போது உள்ள தொழில்நுட்பங்கள் மூலம் அந்த புகைப்படங்களை ஆபாசமாக மாற்றலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

11. உங்கள் password-ஐ பெற்றோர்களை தவிர வேறு யாரிடமும் தெரிவிக்க வேண்டாம்.

12. பணபரிமாற்றங்கள் செய்யும் பொழுது அந்த பக்கத்தின் முகவரியை பாருங்கள். http::// என இருந்தால் உங்கள் கார்ட் விவரங்களை கொடுக்காதீர்கள். https:// என்று இருந்தால் மட்டுமே பணப்பரிமாற்றம் செய்யுங்கள். https::// என்பது பாதுகாப்பான வழியாகும். 

13. காதலன் என்றாலும் உங்களை படம்பிடிப்பதை அனுமதிக்காதீர்கள்.

பிரச்சனை பெரிதாக ஆனால் ஃசைபர் க்ரைமில் புகார் செய்யலாம். புகார் செய்யும் முன் வக்கீல்களிடம் ஆலோசனை பெறவும்.

சைபர் க்ரைமில் ஏற்றுக்கொள்ளப்படும் புகார்கள்:

1. இண்டர்நெட் கடவுச்சொல் திருட்டு 

2. அச்சுறுத்தும் மின்னஞ்சல்கள் 

3. இணைய பின்தொடர்தல் (Cyber Stalking) [பாலியல் ரீதியிலான தொல்லைகள், வேறொருவர் உங்களை போல இணையத்தில் உலவுவது, மிரட்டல்கள் ஆகியவைகளும் அடங்கும்].  

4. குழந்தைகள் வன்கொடுமை / ஆபாச தளங்கள் 

5. கடன் அட்டை எண் திருட்டு
 

6. வலைத்தள ஹேக்கிங்

தமிழ்நாட்டில் புகார்  கொடுக்க:

சென்னை தவிர பிற மாவட்டங்கள்:
 Tmt.Sonal V.Misra, IPS,
SCB, Cyber Cell
SIDCO Electronics Complex,
Block No. 3, First Floor,
Guindy Industrial Estate,
Chennai -32

மின்னஞ்சல் முகவரி: spcybercbcid.tnpol(at)nic.in

சென்னை:
Tr.S.Aravind,
DSP, CBCID, Cyber Crime Cell
SIDCO Electronics Complex,
Block No. 3, First Floor,
Guindy Industrial Estate,
Chennai -32

தொலை பேசி எண்: 044-22502512
மின்னஞ்சல் முகவரி: cbcyber (at) nic.in

கவனிக்க:  இந்த பதிவை எழுதுவதற்கு என்னை தூண்டியதே 3,6,7 ஆகிய குற்றங்கள் தான். அவைகள் என்னை அதிகம் கவலைப்பட வைத்தது. நாளைய தலைமுறையினர் வழிமாறி செல்லக்கூடாது என்பதே எனது ஆசை. 

நன்றி: இந்த பதிவு டெர்ரர் கும்மி விருதுகள் 2011-ல் விழிப்புணர்வு பகுதியில் இரண்டாம் பரிசு பெற்றுள்ளது. டெர்ரர் கும்மி நண்பர்களுக்கும், தேர்ந்தெடுத்த நடுவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!

Post a Comment

29 Comments

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
    சகோ.அப்துல் பாஸித்,

    தற்போதைய தேவைக்கு ஏற்ற மிக்க அவசியமான பதிவு.
    முன்னரே சொன்னபடி, சமூக தீமைகளை எதிர்த்து பதிவுகள் போட ஆரம்பித்துவிட்டீர்கள். இருகரம் தட்டி வரவேற்கிறேன்.

    மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
  2. விழிப்புணர்வு ஊட்டும் தகவல் நன்றி...

    ReplyDelete
  3. சமூக அக்கறையுள்ள, விழிப்புணர்வைத் தூண்டக்கூடிய பதிவு.. நிறைய தகவல்களை அறிந்துகொள்ள உதவியது பதிவு. பகிர்வுக்கு மிக்க நன்றி, வாழ்த்துக்கள்..!!

    ReplyDelete
  4. நல்ல ஒரு எச்சரிக்கை பதிவு நண்பரே.

    ReplyDelete
  5. //முஹம்மத் ஆஷிக் 'Citizen of World' said...
    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
    சகோ.அப்துல் பாஸித்,

    தற்போதைய தேவைக்கு ஏற்ற மிக்க அவசியமான பதிவு.
    முன்னரே சொன்னபடி, சமூக தீமைகளை எதிர்த்து பதிவுகள் போட ஆரம்பித்துவிட்டீர்கள். இருகரம் தட்டி வரவேற்கிறேன்.

    மிக்க நன்றி சகோ.//

    நன்றி சகோ.!

    ReplyDelete
  6. //cool said...
    விழிப்புணர்வு ஊட்டும் தகவல் நன்றி...
    //

    நன்றி நண்பா!

    ReplyDelete
  7. //தங்கம்பழனி said...
    சமூக அக்கறையுள்ள, விழிப்புணர்வைத் தூண்டக்கூடிய பதிவு.. நிறைய தகவல்களை அறிந்துகொள்ள உதவியது பதிவு. பகிர்வுக்கு மிக்க நன்றி, வாழ்த்துக்கள்..!!
    //

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  8. //Riyas said...
    good and useful post
    //

    Thank You Friend!

    ReplyDelete
  9. //N.H.பிரசாத் said...
    நல்ல ஒரு எச்சரிக்கை பதிவு நண்பரே.
    //

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  10. சமூக அக்கறையுள்ள, விழிப்புணர்வைத் தூண்டக்கூடிய பதிவு..
    வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  11. நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. நல்ல விழிப்புணர்வு பகிர்வு
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. //வெள்ளித்திரை விமர்சனம் said...

    சமூக அக்கறையுள்ள, விழிப்புணர்வைத் தூண்டக்கூடிய பதிவு..
    வாழ்த்துக்கள்..!

    //

    நன்றி நண்பா!

    ReplyDelete
  14. //nidurali said...

    நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்!
    //

    வாழ்த்துக்கு நன்றி!

    ReplyDelete
  15. //மச்சவல்லவன் said...

    நல்ல விழிப்புணர்வு பகிர்வு
    வாழ்த்துக்கள்.
    //

    நன்றி நண்பா!

    ReplyDelete
  16. நல்ல விழிப்புணர்வு பகிர்வு
    நிறைய தகவல்களை அறிந்துகொள்ள உதவியது பதிவு. பகிர்வுக்கு மிக்க நன்றி,
    rajesh

    ReplyDelete
  17. //மாய உலகம் said...

    நல்ல விழிப்புணர்வு பகிர்வு
    நிறைய தகவல்களை அறிந்துகொள்ள உதவியது பதிவு. பகிர்வுக்கு மிக்க நன்றி,
    rajesh
    //

    நன்றி நண்பா!

    ReplyDelete
  18. பயனுள்ள பதிவு.மிக்க நன்றி சகோதரா.உங்கள் வலைப்பூ மிகவும் பயனுள்ளதாக உள்ளது,தங்கள் பணி இனிதே தொடரட்டும்.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. //விஜயன் said... 19

    பயனுள்ள பதிவு.மிக்க நன்றி சகோதரா.உங்கள் வலைப்பூ மிகவும் பயனுள்ளதாக உள்ளது,தங்கள் பணி இனிதே தொடரட்டும்.வாழ்த்துக்கள்//

    நன்றி சகோ.!

    ReplyDelete
  20. நண்பா மிகவும் முக்கியமான தகவல் தந்துள்ளீர்கள் பல்வேறு வகையான குற்றங்களை தெளிவாக விவரித்து உள்ளிர்கள் மிக்க நன்றி நண்பா by முருகானந்தம் MGA

    ReplyDelete
  21. ஒப்பற்ற ஓறிறையின் சாந்தியும் சமதானமும் உண்டவதாக
    மிகவும்பயனுள்ள பதிவு மீல் பதிவு செய்கிறேன் சகொ.
    வாங்களேன் எனது வலைப்பூவிற்க்கு உங்கள் கருத்தையும்
    பதிவு செய்ய காத்திருக்கிறேன்
    அன்புடன் ஓ.பி.கலில் ரஹ்மான்
    எஸ்.பி.பட்டினம்
    http://www.kaleelsms.com/2011/09/cyber-crimes.html

    ReplyDelete
  22. நண்பா எனக்கு ebay இல் பொருட்களை எவ்வாறு பாதுகாப்பாக வாங்கலாம் அத்துடன் ebay ஐ பற்றிய முழு தகவல்களும் தர முடியுமா?? அத்துடன் நன் இலங்கையில் வசிப்பதால் இலங்கைக்கு நன் வாங்கும் பொருட்கள் வருமா என்பதையும் விளக்கமாக தரமுடியுமா??

    ReplyDelete
  23. //Muruganandham MGA said... 21

    நண்பா மிகவும் முக்கியமான தகவல் தந்துள்ளீர்கள் பல்வேறு வகையான குற்றங்களை தெளிவாக விவரித்து உள்ளிர்கள் மிக்க நன்றி நண்பா by முருகானந்தம் MGA//

    நன்றி நண்பா!

    ReplyDelete
  24. //kaleelsms.com said... 22

    ஒப்பற்ற ஓறிறையின் சாந்தியும் சமதானமும் உண்டவதாக
    மிகவும்பயனுள்ள பதிவு மீல் பதிவு செய்கிறேன் சகொ.
    வாங்களேன் எனது வலைப்பூவிற்க்கு உங்கள் கருத்தையும்
    பதிவு செய்ய காத்திருக்கிறேன்
    அன்புடன் ஓ.பி.கலில் ரஹ்மான்
    எஸ்.பி.பட்டினம்
    http://www.kaleelsms.com/2011/09/cyber-crimes.html//

    தங்களின் மீதும் அமைதி நிலவுவதாக!

    மீல்பதிவிற்கு நன்றி சகோ!

    ReplyDelete
  25. //Paraneetharan said... 23

    நண்பா எனக்கு ebay இல் பொருட்களை எவ்வாறு பாதுகாப்பாக வாங்கலாம் அத்துடன் ebay ஐ பற்றிய முழு தகவல்களும் தர முடியுமா?? அத்துடன் நன் இலங்கையில் வசிப்பதால் இலங்கைக்கு நன் வாங்கும் பொருட்கள் வருமா என்பதையும் விளக்கமாக தரமுடியுமா??
    //

    நண்பா!ebay பார்த்திருக்கிறேன். ஆனால் அதன் நம்பகத்தன்மை பற்றி தெரியவில்லை. தேடிய வரை இலங்கை பற்றிய விவரம் கிடைக்கவில்லை நண்பா!

    ReplyDelete
  26. டெரர் கும்மி விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  27. தக்க சமயத்தில் தேவையான தகவல்களை தந்தமைக்கு நன்றி ! நன்பர்பாஸித் அவர்களே

    ReplyDelete
  28. @வெங்கட்

    நன்றி நண்பரே!

    ReplyDelete